சுதந்திரக் காற்று வீசும் நாட்டின்
கல்லூரியில் படிக்கும் மாணவன்
வளமான தேசத்தைப் பற்றி எழுதுவது
சுவரொட்டிகள் அலங்கரித்த பேருந்துகள்
பராமரிப்புக்கு ஏங்கும் உயிர்கள்
சத்தம் நிறைந்த வீடுகள்
என ஆயிரம் குறைகள்
கண்களோடு இருட்டில் வாழும்
கிராமத்து வயலின் விவசாயிகள்
வேலை தேடும் திறமைசாலிகள்
என அப்பாற்பட்ட மனிதர்கள்
ஆனால் இந்தியன் என்ற உணர்வு
அனைவரையும் ஒன்றாக மாற்றுகிறது
தேசிய கொடியை மேலும் உயர்த்திய
இந்த நாட்டின் அடையாளங்களுக்காகவும்
எல்லைகளை குடும்பங்களின் நினைவோடு
காத்து இறந்த பின்னரும் தனது
குடும்பம் தன் மக்களைக் காக்கும்
என்ற புனிதர்களுக்காகவும்
முரசே நீ கொட்டுவாயா???
- அருண் குமார் முத்தழகன்
No comments:
Post a Comment