வீசும் காற்று விழும் துளிகளை
வீழ்த்தி விலகி சென்றது
ஒருவன் இறைவனின் முன்
நின்றான் சிறிய கேள்வியுடன்
சிறந்த இசையின் கேள்விக்கு
தாயின் தாலாட்டும் குயிலின்
குரலும் மழையின் சாரல்
ஓசையும் பதிலாகக் கிடைத்தது.
பள்ளி நேரம் முடியும்போது
ஒலிக்கும் மணியை பதிலாக
எதிர்பார்த்த அவனோ
இறைவனிடம் நின்றான்.
மழையின் துளிகள் நின்றன
புயல் தென்றலாய் மாறியது
முதல் முறையாக அமைதியை
இசை எனக் கேட்டு மகிழ்ந்தான்.
- அருண் குமார் முத்தழகன்
எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும்
No comments:
Post a Comment